ஏதோ பேய் படத்தில் வருவதுபோல, கொரோனா வைரஸ் இவருக்கு இருக்கிறதா..? இல்லையா..? என ஆய்வு செய்துவந்த, 5 மாடிக் கட்டிட முகாம் தரைமட்டமானது..! பலியும் பரிதாபமும் பெருகியது.!!
சீனாவின் ஃபுஜியான் மாகாணம், லிச்செங் மாவட்டத்துக்கு உட்பட்ட குவான்ஸ் நகரில் 5 மாடிகளைக் கொண்ட க்சின்ஜியான் என்ற ஓட்டல், தற்காலிக கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
பல மணி நேர போராட்டம் :
பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு, 38 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மற்ற 33 பேரை மீட்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
20 பேர் மீட்பு ; 20 பேர் உயிரிழப்பு :
ஆரம்ப நிலையில் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நடந்து சுமார் 72 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், நேற்றிரவு 10 வயது சிறுவனும் அவனுடைய தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.